முன்னதாக, 2021ஆம் ஆண்டு Brexit காரணமாக இங்கிலாந்து இந்த திட்டத்திலிருந்து விலகியது. தற்போது செய்யப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் மூலம், மாணவர்கள், பயிற்சி பெறுவோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி தொடர்புடையவர்கள் மீண்டும் இங்கிலாந்திற்கு சென்று கல்வி கற்க, பயிற்சி பெற மற்றும் கற்பிக்க வாய்ப்பு பெறுவார்கள்.
இந்த மாற்றம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான கல்வி தொடர்புகளை மீண்டும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிதி தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




























