இலங்கை அரசு இன்று (2026 மே 25) முதல் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச Electronic Travel Authorization (ETA) வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Sri Lanka குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி இந்த இலவச ETA 30 நாட்கள் செல்லுபடியாகும் இருமுறை நுழைவு (Double Entry) அனுமதியுடன் வழங்கப்படும்.
இலங்கை இந்த புதிய திட்டத்தின் கீழ் பிரான்ஸ், யுனைடெட் கிங்டம், அமெரிக்கா, இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளின் குடிமக்கள் இலவசமாக ETA பெற முடியும். மேலும் மாலத்தீவுகள், சிங்கப்பூர் மற்றும் சீஷெல்ஸ் நாடுகளுக்கான இலவச ETA வசதியும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள், சில இராஜதந்திர மற்றும் அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களைத் தவிர முன்கூட்டியே ETA அனுமதி பெறுவது கட்டாயமாகும். 30 நாட்களுக்கு மேலாக தங்க விரும்புவோர் கட்டணத்துடன் விசா நீட்டிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Leave a Reply