அடவீரகொல்லாவ போலீஸ் பிரிவு சோதனையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கிகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அடவீரகொல்லாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் வெளிநாட்டு துப்பாக்கிகள் கிரீஸ் தடவி மெழுகு மூலம் மூடி கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அவர்களை கைது செய்ய அடவீரகொல்லா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சந்தேக நபர்களை கண்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.





Leave a Reply