ஆஸ்திரேலியா குடியேற்றக் கொள்கையும் – தற்காலிக குடியிருப்பாளர்களின் நிலையும்.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் தற்காலிக குடியேற்ற மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தெளிவான இலக்குகளை அமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்திய அறிக்கையின் படி கடந்த 15 ஆண்டுகளில் தற்காலிக குடியேற்றர்கள் மொத்த மக்கள்தொகையில் 2.7% இலிருந்து 6% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த வேகமான உயர்வு வீடமைப்பு பொதுச் சேவைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தற்போதைய “Net Overseas Migration (NOM)” எண்ணிக்கையை மட்டும் கவனிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் தற்காலிக குடியேற்றர்களின் மொத்த அளவை கட்டுப்படுத்துவது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்கள் குடியேற்றத்தை குறைப்பதற்காக அல்ல ஆனால் அதை நிலையான மற்றும் நிர்வகிக்கக்கூடிய அளவில் வைத்திருக்க புதிய கொள்கை தேவை என்று வலியுறுத்தினர்.

மேலும் கனடா எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு தற்காலிக குடியேற்றத்தை குறைப்பது வீட்டு வசதி அழுத்தத்தை குறைத்தாலும் அதே நேரத்தில் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே ஆஸ்திரேலியா அதேபோன்ற திடீர் முடிவுகளை எடுக்காமல் தற்காலிக விசா திட்டங்களை நிரந்தர குடியேற்றத்துடன் இணைத்து திட்டமிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading