ஐரோப்பிய ஒன்றியம் – Return Hub மையங்கள் அமைக்க திட்டம்
(EU) நிராகரிக்கப்பட்ட அகதிகள் மற்றும் சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேற்றவர்களை ஐரோப்பாவுக்கு வெளியே அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக “Return Hub” எனப்படும் மையங்களை அமைக்க 12 நாடுகளை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மையங்களில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை தங்க வைக்கப்படுவர். தற்போதைய தரவுகளின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் நாடு விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டவர்களில் சுமார் 20% பேர் மட்டுமே உண்மையில் திரும்பிச் செல்கிறார்கள் என்பதால் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுகின்றது.
ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகள் இணைந்து இந்த Return Hub முறைமையை செயல்படுத்த முனைந்துள்ளன. அல்பேனியா, துனீசியா, மொராக்கோ, ருவாண்டா மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகள் சாத்தியமான இடங்களாக கருதப்படுகின்றன.
இந்த திட்டம் மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அகதிகள் சிறை போன்ற சூழலில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், மனித உரிமை மீறல்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் குடியேற்ற கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகளை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.





Leave a Reply