Entry/Exit System (EES) – இத்தாலி உட்பட 29 Schengen நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) புதிய Entry/Exit System (EES) முறையை 2026 ஏப்ரல் 10 முதல் முழுமையாக அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பு இருந்த பாஸ்போர்ட் முத்திரை (stamp) முறைக்கு பதிலாக இனி பயணிகளின் கைரேகை (fingerprint) மற்றும் முகஅடையாளம் (facial scan) போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படும்.

இந்த முறை குறிப்பாக EU அல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு (short stay – 90 நாட்கள்) பொருந்தும். இந்த புதிய டிஜிட்டல் எல்லை கட்டுப்பாட்டு முறை பயணிகளின் வருகை மற்றும் வெளியேறும் தகவல்களை தானாக பதிவு செய்து சட்டவிரோத தங்குதலை (overstay) தடுக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும்.

முதன்முறையாக வருபவர்கள் தங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டியிருக்கும் பின்னர் பயணங்களில் சேமிக்கப்பட்ட தகவல்களை வைத்து சோதனை எளிதாக நடைபெறும். இத்தாலி உட்பட 29 Schengen நாடுகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டாலும் ஆரம்ப கட்டத்தில் விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தாமதங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நீண்ட காலத்தில் இது பயண செயல்முறையை வேகமாகவும் சீராகவும் மாற்றும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading