சுவிட்சர்லாந்து – சிரியா நாட்டு அகதிகளை திருப்பி அனுப்ப திட்டம்.

சுவிட்சர்லாந்து அரசு, சிரியாவிலிருந்து வந்த அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடைமுறையை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில் Bashar al-Assad ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவின் நிலைமை தெளிவாக இல்லாத காரணத்தால் அகதி விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது நிலைமைகளை ஆய்வு செய்த பிறகு மே 1 முதல் மீண்டும் ஒவ்வொரு விண்ணப்பமும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்படும் என்று குடியேற்றச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் கூறுவதாவது சிரியாவின் எல்லா பகுதிகளிலும் பொதுவான வன்முறை நிலை இல்லை என கருதப்படுகின்றது. எனவே பாதுகாப்பான சூழ்நிலை இருக்கும் பகுதிகளுக்கு சிலரை திருப்பி அனுப்ப முடியும். ஆனால் இன்னும் பல பகுதிகளில் பாதுகாப்பு பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் அனைவரையும் உடனடியாக அனுப்புவது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னார்வமாக சிரியாவுக்கு திரும்ப விரும்புவோருக்கு உதவித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மறுசேர்க்கை திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுவதுடன் சுவிட்சர்லாந்து கூடுதலாக தொகையும் வழங்குகிறது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மட்டும் சுமார் 60 பேர் இத்திட்டத்தின் மூலம் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading