2025 டிசம்பர் 1 முதல் பிரான்சில் அனைத்து வகையான சக்கர நாற்காலிகளும் முழுமையாக தேசிய மருத்துவக் காப்பீட்டின் கீழ் பாதுகாப்பு பெறும் என அரசு அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சுயநினைவு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் ஆகியோருக்கு சமமான மற்றும் எளிதான அணுகலை வழங்குவது இந்த சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கம். 2023 தேசிய மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம், மருத்துவர் அல்லது தொழில் சிகிச்சையாளர் வழங்கும் சரியான மருந்து சீட்டின் அடிப்படையில் அமலுக்கு வரும்.

இதன் மூலம் பயனாளிகளுக்கு எந்தவித முன்பணம் செலுத்தும் அவசியமும் இருக்காது சக்கர நாற்காலியின் முழு செலவையும் தேசிய மருத்துவக் காப்பீடு ஏற்கும். மேலும் பட்டியலில் இல்லாத சிறப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் பொருட்கள் இரண்டு மாதத்திற்குள் காப்பீட்டின் முன் அனுமதி பெற்று ஈடுகட்டப்படும் பதில் கிடைக்காதபட்சத்தில் தானாகவே ஒப்புதல் என கருதப்படும்.

விளையாட்டு சக்கர நாற்காலிகள் உட்பட அனைத்து மாடல்களும் குவரேஜில் சேர்க்கப்பட்டுள்ளன. விற்பனையாளர்கள் அதிகபட்ச விலை வரம்பிற்குள் மட்டுமே பொருட்களை விற்க வேண்டும் என்பதால் பயனாளிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படாது. இந்த சீர்திருத்தத்தின் அமல்பாட்டை கண்காணிக்க பயனாளர் அமைப்புகள், மருத்துவர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து செயலாக்கக் குழு அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading