அமெரிக்காவில் உக்ரைன் போரில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமுக அனுமதி திட்டம் (Uniting for Ukraine) தொடர்பான முடிவு டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் தாமதிக்கப்பட்டதால், தற்போது சுமார் 2.6 இலட்சம் உக்ரைனியர்கள் கடுமையான சட்ட மற்றும் வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த தாமதம் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவர்களின் சட்ட அனுமதி மற்றும் வேலை அனுமதியை இழக்கும் ஆபத்தில் உள்ளனர். ப்ளோரிடாவில் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றிய 35 வயதான கதரினா கோலிஸ்ட்ரா உள்ளிட்ட பலர், சட்ட நிலை காலாவதியானதால் வேலை, உடல்நலக் காப்பீடு ஆகியவற்றை இழந்து, வெளியேற்றப்படுவோமா என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள்.
திட்டத்தை நீட்டிக்கவா அல்லது மாற்றவா என்பதை குறித்து அரசு முடிவு எடுக்காததால் ஆயிரக்கணக்கான உக்ரைன் அகதிகள் தற்போது வருமான இழப்பு, சிகிச்சை கிடைக்காத நிலை, குடும்பங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலை போன்ற கடுமையான பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.





Leave a Reply