Tag: குவைத்
குவைத்தில் சட்டவிரோத வணிகத்திற்கு, வெளிநாட்டவர்கள் சட்ட விதிகள் அல்லது உரிம நிபந்தனைகளை மீறி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் வணிக மறைப்பு நடவடிக்கைகளுக்கு குவைத் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், ஒரு வெளிநாட்டவர் தேவையான சட்ட அனுமதி அல்லது உரிமம் இல்லாமல் நேரடியாகவோ மறைமுகமாகவோ வணிகம் தொழில் சேவை அல்லது பிற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரின் பெயர் அல்லது நிறுவனத்தை முன்னிலைப்படுத்தி உண்மையான வணிக நடவடிக்கையை மறைப்பதும் இதில் அடங்கும். […]
குவைத்தில் குடிநீர், குவைத்தில் பாட்டிலில் நிரப்பப்பட்ட குடிநீருக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்றும், மக்கள் தேவையற்ற அளவில் குவித்து வாங்குவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே கொள்முதல் பில்லில் அதிகபட்சம் 5 கார்டன் மட்டுமே வாங்க அனுமதிக்கும் நடைமுறை தொடரும் என்றும் குவைத் சமூக விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து கூட்டுறவு சங்கங்களும் மற்றும் மத்திய சந்தைகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது. […]
Saudi FM, Iranian attacks, Arab countries ஆகியவை தற்போது மத்திய கிழக்கில் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் பல அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி ஈரான் மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல்களில் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அந்த நாடுகளின் […]
குவைத் Final Settlement, வீட்டுப் பணிப்பெண்ணின் Final Settlement, வீட்டு ஓட்டுநர் EOSB தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஆனால் குவைத்தில் வீட்டு வேலைக்காரர்கள் வீட்டு ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து Domestic Worker-களும் தனியார் துறை தொழிலாளர் சட்டத்தின் கீழ் அல்லாமல் Domestic Workers Law No. 68 of 2015 என்ற தனிச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். இந்தச் சட்டத்தின் படி வேலை ஒப்பந்தம் முடிவடைந்தாலோ அல்லது வேலை உறவு சட்டப்படி முடிவுக்கு வந்தாலோ பணியாளருக்கு […]
Kuwait Jobs Newsகுவைத் உள்துறை அமைச்சகம் வீட்டு வேலைக்காரர்கள் (Domestic Workers) ஆட்சேர்ப்புக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுற்றறிக்கையின்படி குவைத் தற்போது 10 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு வேலைக்காரர்களை பணியமர்த்த அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் 27 நாடுகளிலிருந்து வீட்டு வேலைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு வெளியுறவு அமைச்சகம் சுகாதார அமைச்சகம் மற்றும் பொது மனிதவள ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட 27 […]
மத்திய கிழக்கில் பதற்றம்பஹ்ரைன் குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு அரபு நாடுகளும் பிராந்திய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்கள் அந்த நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு எதிரான செயலாகும் என பல்வேறு அறிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரபு லீக் பொதுச்செயலாளர் அஹ்மத் அபூல் கைத் இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரித்து உடனடி மத்திய கிழக்கில் […]
Kuwait Newsகுவைத் சமூக விவகார அமைச்சகம் (MoSA) கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அதிகாரப்பூர்வ பணிநேரங்களில் தினமும் மூன்று முறை கைரேகை (Fingerprint) பதிவு செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் பணிக்கு வரும்போது ஒரு பதிவு பணிநேரத்தில் தொடர்ந்து பணியில் இருப்பதை உறுதிப்படுத்த ஒரு பதிவு மற்றும் பணியை முடித்து வெளியேறும் போது ஒரு பதிவு என மொத்தம் மூன்று முறை கைரேகை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக […]
குவைத் அரசு, அண்மையில் நடைபெற்ற ஈரானின் மீண்டும் மீண்டும் இடம்பெறும் தாக்குதல்களை மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளது. குறிப்பாக ஜூன் 6 அதிகாலை நடைபெற்ற சமீபத்திய தாக்குதல் சர்வதேச அளவில் வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்ற அழைப்புகளை முற்றிலும் புறக்கணிக்கும் நடவடிக்கையாகவும் குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகவும் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல்கள் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் அபாயகரமான முன்னேற்றமாக கருதப்படுகின்றன. குவைத் அரசு, […]
குவைத்தில் அனுமதியற்ற பயணிகள் போக்குவரத்து மேற்கொள்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உரிய அனுமதி இல்லாமல் பணம் பெற்றுக்கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு உடனடி சமரச அபராதமாக KD150 விதிக்கப்படும். வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றால் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது KD600 முதல் KD1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் விதிமீறலில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சட்டவிரோத குடியிருப்பாளர்கள் மற்றும் அனுமதியற்ற போக்குவரத்து சேவைகளை கட்டுப்படுத்த […]
குவைத் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட 4 உயர்நிலை ஈரான் கடற்படை அதிகாரிகள் தாங்கள் ஈரானின் Revolutionary Guards (IRGC) அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக குவைத் அரசின் KUNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை கர்னல் அமீர் ஹொசைன் அப்தோல் முகமது ஜரேய், கடற்படை கர்னல் அப்தோல்சமட் யெடலே கானாவதி, கடற்படை கேப்டன் அஹ்மத் ஜம்ஷித் கோலம்ரேசா சோல்பகாரி மற்றும் முதல் லெப்டினன்ட் முகமது […]