Kuwait News
குவைத் சமூக விவகார அமைச்சகம் (MoSA) கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அதிகாரப்பூர்வ பணிநேரங்களில் தினமும் மூன்று முறை கைரேகை (Fingerprint) பதிவு செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் பணிக்கு வரும்போது ஒரு பதிவு பணிநேரத்தில் தொடர்ந்து பணியில் இருப்பதை உறுதிப்படுத்த ஒரு பதிவு மற்றும் பணியை முடித்து வெளியேறும் போது ஒரு பதிவு என மொத்தம் மூன்று முறை கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பாக நடுப்பகுதி பதிவு ஊழியர் முழு பணிநேரமும் பணியிடத்தில் இருந்ததை நிரூபிக்கும் ஆதாரமாக கருதப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்று பதிவுகளில் ஏதேனும் ஒன்றை தவிர்ப்பது நிர்வாக விதிமீறலாக கருதப்பட்டு சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Kuwait News
இந்த விதிமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் கூட்டுறவு சங்கங்களே பொறுப்பாக இருக்கும் என்றும், விதிமுறைகளை பின்பற்றத் தவறினால் நிர்வாக மற்றும் சட்டப் பொறுப்புகளை அவை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கோடை விடுமுறை காலத்தில் குவைத் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குமாறும் கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.













Leave a Reply