தவறான தகவல் அளிக்கும் நிறுவனங்களுக்கு 10,000 தினார் வரை அபராதம்.

Kuwait அரசு நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிடாதவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்ட புதிய தீர்மானத்தின் படி உரிமையாளர் தகவலை சரியாக வெளியிடாத அல்லது தவறான தகவல் அளிக்கும் நிறுவனங்களுக்கு 1,000 குவைத் தினாரில் தொடங்கி 10,000 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையின் கீழ் எந்த நிறுவனமும் புதிய வர்த்தக உரிமம் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ முன் அதன் உண்மையான உரிமையாளர்களின் விவரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல் வெளியிடப்படாத நிலையில் உரிமம் வழங்கப்படாது அல்லது புதுப்பிக்கப்படாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் தவறான அல்லது போலியான தகவல்களை வழங்குபவர்களுக்கும் அதே அளவு அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை பணம் சலவை (money laundering) மற்றும் பயங்கரவாத நிதி ஆதரவை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் ஏப்ரல் 16 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் வணிகத் துறையில் வெளிப்படைத்தன்மையை (transparency) அதிகரிக்கவும் சர்வதேச நிதி ஒழுங்குகளை பின்பற்றவும் இது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading