பரிவர்த்தனை வெற்றியளிக்கவில்லை என்ற செய்தி வந்ததையடுத்து சில நிமிடங்களில் கணக்கிலிருந்த பணம் முழுவதும் எடுக்கப்பட்டதை அவர் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் வங்கி பதிப்பு மோசடி மற்றும் மின் மோசடி என போலீசார் பதிவு செய்து வழக்கை Commercial Affairs Prosecutionக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாரிகள் தெரிவித்ததாவது மோசடி கும்பல்கள் அதிகாரப்பூர்வ தளங்களைப் போலவே தோன்றும் இணையதளங்களை உருவாக்கி தேடல் முடிவுகளில் முன்னிலைப்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே பொதுமக்கள் அதிகாரப்பூர்வ URL-களை சரிபார்த்து பயன்படுத்த வேண்டும் தெரியாத இணைப்புகள் மற்றும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் உடனடியாக வங்கி கணக்கை சரிபார்த்து சந்தேகமான நடவடிக்கைகளை புகார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.





























