Tag: Chemmani Excavation
செம்மணி மனித புதைகுழி, தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதன் 44ஆவது நாளான இன்று (05) மேலும் 8 புதிய என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன் முன்னதாக அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 491 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் […]
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழு இன்று (22) விஜயம் மேற்கொண்ட நிலையில் மயானத்துக்கு வெளியே ஏ-9 வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்நாட்டு விசாரணை முறைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் எதிர்பார்த்த நீதியை வழங்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்த போராட்டக்காரர்கள் […]
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 38ஆவது நாள் இன்று (20) முன்னெடுக்கப்பட்டபோது சிசு ஒன்றின் என்புக்கூடு உட்பட மேலும் எட்டு என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்றைய அகழ்வில் இரண்டு சிறுவர்களின் என்புக்கூடுகள் மற்றும் ஒரு சிசுவின் என்புக்கூடு உள்ளிட்ட புதிய எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று உட்கார்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட என்புக்கூட்டை சுத்தம் செய்யும் பணிகளும் இன்றும் […]
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (16) 34ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளுடன் மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புத் தொகுதிகளில் மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனவும் ஒரு குழந்தையின் எலும்புத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் […]
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவு அதிகாரிகளைச் சந்தித்து செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது செம்மணி அகழாய்வில் இதுவரை 380-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளில் முன்னேற்றம் […]
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் 17ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (05) நடைபெற்ற நிலையில் மேலும் 13 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஏற்கனவே கண்டறியப்பட்ட எச்சங்களில் இருந்து மூன்று சிறுவர்களுக்குச் சொந்தமான என்புக்கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 11 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் செம்மணி புதைகுழியில் இதுவரை 296 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 290 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து […]