Tag: Climate Resilience
Weather Report,காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் தற்போதைய பேரிடர் தயார்நிலை போதுமான அளவில் இல்லை என பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிகரித்து வரும் தீவிர மழை, வெள்ளம், மண்சரிவு, கடும் காற்று மற்றும் பிற இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசர செயற்பாட்டு திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகள் தெரிவிப்பதாவது காலநிலை மாற்றத்தின் தாக்கம் எதிர்காலத்தில் […]
Asia News,சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு புதிய சர்வதேச காலநிலை நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கூட்டாண்மை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை நடைபெற்ற ஐ.நா. ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக் […]
மக்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் ஆபத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து “இலங்கை” என்ற ஒரே தரப்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவான மூலோபாய கொள்கை முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார். 2026–2027 எல் நினோ சுழற்சி கடுமையான வறட்சி […]
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் தேசிய மட்டச் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக விசேட அமைச்சரவை உபகுழுவொன்றையும் அதனை ஒருங்கிணைத்து செயல்படுத்த அதிகாரிகள் குழுவொன்றையும் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் நீர்வள முகாமைத்துவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கான திட்டங்கள் இந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் […]
எல் நினோ தாக்கத்தின் தொடர்பாக ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் முன்னெச்சரிக்கை திட்டங்களைத் தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய வறட்சி, வெள்ளம் மற்றும் விவசாய பாதிப்புகளை குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். காலநிலை ஆய்வாளர்களின் கணிப்புகளின்படி எதிர்வரும் மாதங்களில் எல் நினோ தாக்கத்தின் நிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் நீர்வள முகாமைத்துவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் தயார்நிலை தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. […]
டிட்வா நிவாரணத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் (Humanitarian Priorities Plan) நிறைவு நிகழ்வு இன்று (11) கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே டிட்வா சூறாவளியால் […]