Tag: Cost of Living
இலங்கையில் தேசிய உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஏப்ரல் மாதத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தது 17,117 ரூபா மாதாந்த வருமானம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வறுமைக்கோடு ஜனவரியில் 16,730 ரூபாவாக இருந்த நிலையில் ஏப்ரலில் 17,117 ரூபாவாக உயர்ந்துள்ளது. மாவட்ட ரீதியாக கொழும்பில் 18,461 ரூபாவுடன் அதிகபட்ச வறுமைக்கோடு பதிவாகியுள்ளதுடன் கம்பஹா மற்றும் நுவரெலியா அடுத்த […]
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்ட ஒப்பந்தம் இன்னும் ஏழு மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில் அதன் பொருளாதார சமூக மற்றும் நிதி ரீதியான விளைவுகள் குறித்து அரசாங்கம் தெளிவான மதிப்பீட்டை வெளியிட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் வரி அதிகரிப்பு எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சுமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனக் […]
டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அரசாங்கம் முன்வைத்து வரும் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் அற்றவை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது நாட்டின் வெளிநாட்டு கடன்களை ரூபாய் மதிப்பில் மீளச் செலுத்த வேண்டிய சுமை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அதன் […]
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கம் டொலர் பெறுமதி உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஆடை இறப்பர் ஏற்றுமதித் துறைகளின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதனால் மக்களின் ஆதரவை இழந்துள்ள அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் அரசாங்கத்துக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருந்தால் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் […]
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பஸ் கட்டணத்தை உயர்த்தும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உடனடி கட்டண உயர்வுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து துறையில் செலவுகள் அதிகரித்தாலும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய பஸ் கட்டணமே தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் நாளாந்தம் பொதுப் […]
எரிபொருள் செலவைக் குறைத்து பொதுமக்களுக்கு நிதி உதவி அறிவிப்பு – கனடா அரசு கனடா அரசு நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் புதிய நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூட்டாட்சி எரிபொருள் வரி (fuel excise tax) தற்காலிகமாக நீக்கப்பட்டு கனடியர்களுக்கு நேரடி பொருளாதார நன்மை வழங்கப்பட உள்ளது. அரசின் அறிவிப்பின்படி 2026 ஏப்ரல் 20 முதல் 2026 செப்டம்பர் 7 வரை பெட்ரோல் மற்றும் […]