Tag: Cost of Living
பணவீக்கம் உயர்வு இலங்கையின் ஆண்டு அடிப்படையிலான மொத்த பணவீக்க விகிதம் (CCPI) ஜூன் மாதத்தில் பதிவான 6.8 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி உணவுப் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 3.6 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அதேவேளை […]
Fuel Prices, ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இன்று (31) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் CPC தலைவர் ஜே. டி. ராஜகருண இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைகளே ஆகஸ்ட் மாதம் முழுவதும் தொடரும். அதன்படி ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ.382 சூப்பர் டீசல் ரூ.478, 92 ஒக்டேன் பெற்றோல் ரூ.414, 95 […]
Asia News,அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் பலவீனமடைந்துள்ள நிலையில் டொலரின் விற்பனை விலை மீண்டும் 340 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தினசரி மாற்று விகிதத் தரவுகளின்படி ஜூலை 9 அன்று ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.8686 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதனுடன் டொலரின் கொள்முதல் விலை 331.3476 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நாளான ஜூலை 8 அன்று டொலரின் விற்பனை விலை 339.7382 ரூபாயாகவும் […]
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் பல்வேறு வெளிப்புற பொருளாதார சவால்கள் காரணமாக மக்களுக்கு எதிர்பார்த்த அளவிலான நிவாரணங்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டிருந்தாலும் நிலைமை சீரடைந்தவுடன் மேலும் பல நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த நாட்டை பொறுப்பேற்று திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுக்கும் […]
சமையல் எரிவாயு (LP Gas) விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளில் உள்ள உணவகங்கள் உணவக உணவு விலையை குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தினசரி உணவகங்களை நம்பியிருக்கும் பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைத்துள்ளது.அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது எரிவாயு விலை குறைப்பு காரணமாக உற்பத்திச் செலவுகள் ஓரளவு குறைந்துள்ளதால் அதன் பயனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் பல உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சாதம், கொத்து, ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ் மற்றும் […]
வெசாக் பண்டிகைக் காலத்தில் 92 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை ரூ.36 உயர்த்திவிட்டு தற்போது பொசன் பண்டிகையை முன்னிட்டு வெறும் ரூ.20 மட்டுமே குறைத்துள்ள அரசாங்கம் மக்களை ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபடுவதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இந்த சொற்ப விலைக்குறைப்பால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்பதால் தற்போதைய […]
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இளைஞர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் வாழ்க்கைச் செலவு உயர்வால் பொதுமக்களும் இளைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எரிபொருள் செலவு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக […]
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த யுத்தம் முடிவடைந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக எரிபொருட்களின் விலையை குறைத்து அதன் நன்மையை மக்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானபோது உலக சந்தை நிலவரத்தை காரணம் காட்டி அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதாகவும் […]
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கம் எதிர்வரும் மாதம் முதல் சில மானியங்கள் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளமை குறித்து IMF அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தியதாக கூறினார். IMF திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக […]
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும் இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு திட்டம் தற்போது இல்லை என அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் எரிபொருள் விலை தொடர்பான கவலை மீண்டும் அதிகரித்துள்ளது. அரசின் விளக்கத்தின் படி இறக்குமதி செலவுகள், வரி கட்டமைப்பு, போக்குவரத்து செலவுகள் மற்றும் சேமிப்பு–விநியோகச் செலவுகள் ஆகியவை காரணமாக உள்ளூர் விலையில் உடனடி குறைப்பு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக சந்தை விலை மாற்றங்கள் அனைத்தும் நேரடியாக […]