September 8, 2026
Breaking News
ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை

Tag: Excavation

செம்மணி புதைகுழியில் அதிர்ச்சி

செம்மணி புதைகுழி யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 41ஆவது நாளாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை உள்ளடக்கிய 95 நாட்கள் அகழாய்வில் மொத்தம் 478 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 464 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய அகழாய்வில் மூன்று என்புக் குவியல்கள் ஆணிகள் மற்றும் சீமெந்து துண்டு ஒன்றும் கண்டறியப்பட்டன. இதற்கிடையில் 467ஆவது […]

செம்மணி மனித புதைகுழி அமர்ந்த நிலையில் என்புத் தொகுதி

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் இன்றைய (ஜூலை 19) கட்டத்தில் கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் காணப்பட்ட மனித என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த என்புத் தொகுதி மிகவும் அசாதாரணமான நிலையில் காணப்பட்டதாகவும் அதன் அமைப்பு மற்றும் புதைக்கப்பட்ட விதம் தொடர்பாக சட்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் […]

செம்மணி புதைகுழியில் எலும்புக்கூடுகள் 400ஐ கடந்தன

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 30ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) நடைபெற்ற நிலையில் மேலும் 07 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 377 எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அகழாய்வு பணிகளின் மூலம் மேலும் பல […]

செம்மணி அகழ்வில் 275ஐ கடந்த என்புக் கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று நடைபெற்ற 15ஆம் நாள் அகழ்வில் மேலும் 5 புதிய என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து 6 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 34 என்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் புதைகுழிக்குள் இரண்டு இடங்களில் என்புக் குவியல்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். […]

செம்மணி அகழ்வில் சிறுவர் என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் 13ஆம் நாள் அகழ்வின்போது முக்கியமான புதிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அகழ்வில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருந்த இரு என்புக்கூடுகளும் சிறுவர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் என்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். மொத்தமாக 8 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும் மேலும் ஒரு என்புக்குவியல் கண்டறியப்பட்டு அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு […]

செம்மணியில் தாயத்துடன் மீட்கப்பட்ட என்புக்கூடு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் இரண்டாம் பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் காணப்பட்ட மனித என்புக்கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கிய இந்த அகழ்வு நடவடிக்கைகள் மே 9ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்ற பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட அகழ்வின் போது குறித்த என்புக்கூடு கண்டறியப்பட்டது. அதேவேளை புதைகுழி பகுதியில் செத்தல் […]

செம்மணியில் அகழ்வில் குழந்தை எலும்புக்கூடு உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்பு – தங்க ஆபரணமும் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8ஆம் நாளான இன்று (05) குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வின் போது தங்கம் என சந்தேகிக்கப்படும் சிறிய ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆய்வில் மொத்தம் ஐந்து எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டவற்றில் இருந்து ஒரு குழந்தையின் எலும்புக்கூடும் மற்றொரு மனித எலும்புக்கூடும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி […]