Tag: Kuwait Tamil News
Kuwait Jobs Newsகுவைத் உள்துறை அமைச்சகம் வீட்டு வேலைக்காரர்கள் (Domestic Workers) ஆட்சேர்ப்புக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுற்றறிக்கையின்படி குவைத் தற்போது 10 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு வேலைக்காரர்களை பணியமர்த்த அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் 27 நாடுகளிலிருந்து வீட்டு வேலைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு வெளியுறவு அமைச்சகம் சுகாதார அமைச்சகம் மற்றும் பொது மனிதவள ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட 27 […]
குவைத் நாட்டின் உள்துறை அமைச்சகம் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பிச்சை எடுக்கும் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் சேவை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மார்க்கெட்டுகள் மற்றும் பள்ளிவாசல்களின் அருகே சிலர் ரமலானின் ஆன்மீக சூழலை பயன்படுத்தி பிச்சை எடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிச்சை எடுக்கும் நபர்களையும் அதன்மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிய சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் […]
குவைத் நகரில் ஒரு வெளிநாட்டு பணியாளர் 7 குவைதி தினார் (KD) ரவுட்டர் பில் செலுத்த இணையத்தில் தேடியபோது அதிகாரப்பூர்வ இணையதளமாக தோன்றிய போலி தளத்தில் தனது வங்கி கார்டு விவரங்களை உள்ளிட்டதால் அவரது வங்கி கணக்கில் இருந்த 308 KD முழுவதும் மோசடியாக பறிக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனை வெற்றியளிக்கவில்லை என்ற செய்தி வந்ததையடுத்து சில நிமிடங்களில் கணக்கிலிருந்த பணம் முழுவதும் எடுக்கப்பட்டதை அவர் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் வங்கி பதிப்பு மோசடி மற்றும் மின் மோசடி […]
குவைத் நாட்டில் பணிபுரிபவர்கள் உங்களுடைய சொந்த தாய் நாட்டுடன் உங்களுடைய தொடர்பினை இந்த தூதரகங்களின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் எனவே அவர்களது தொலைபேசி இலக்கங்கள் கீழ்காணும் பட்டியலில் இருந்து உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். Embassy Name Phone Number Fax Number Embassy of the United Arab Emirates 22528544 22526382 Embassy of the Kingdom of Bahrain 25318530 25330882 Embassy of the Kingdom of Saudi Arabia 22550021 […]
குற்றப் பாதுகாப்புத் துறை – ஹவாலி கவர்னரேட் புலனாய்வுத் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பொது குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் சுங்கப் பொது நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுப் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, ஷுவாய்க் துறைமுகம் வழியாக நாட்டிற்குள் அதிக அளவிலான மனோவியல் பொருட்களை கடத்த ஐந்து சந்தேக நபர்கள் மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறையடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் விளைவாக சுமார் 364 கிலோகிராம் கேப்டகன் பறிமுதல் செய்யப்பட்டது இது இரண்டு […]
குவைத் பொது மனிதவள அதிகாரசபை (Public Authority for Manpower) அறிவித்ததின்படி, நுகர்வோர் டெலிவரி நிறுவனங்களுக்குச் சொந்தமான மோட்டார் ஸ்கூட்டர்கள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் கடும் கோடைகால வெப்பநிலை காரணமாக டெலிவரி நிறுவன ஸ்கூட்டர்கள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த முடிவு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அப்போது அமைச்சகம் விளக்கியது. அதிகாரசபை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதிய உத்தரவின் படி ஸ்கூட்டர்கள் காலை 11 மணி […]
ஜூலை 1, 2025 முதல் குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளிநாடு செல்லும் முன் தங்கள் வேலைவாய்ப்பாளரின் அனுமதியுடன் Exit Permit பெற வேண்டும் என்று பொது தொழில் அதிகாரசபை (Public Authority for Manpower) அறிவித்துள்ளது. இந்த புதிய சட்டம் Sahel மொபைல் செயலி மூலம் முழுமையாக இலெக்ட்ரானிக்காகவே செயல்படுத்தப்படும், இது வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பாளர்களுக்கும் வெளியேறும் நடைமுறையில் மிகுந்த வசதியும், பாதுகாப்பும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. Exit Permit பெறும் […]
குவைத் அரசு தற்போது “work visa transfer” கட்டண வரையறையில் மாறுதலை கொண்டு வந்துள்ளது. இப்போது குவைத் அரசு அனைத்து வேலை விசா பரிமாற்றங்களுக்கும் ஒரே கட்டணமாக KD 150 (குவைத் தினார்) நிர்ணயித்துள்ளது. இந்த மாற்றமானது 1 ஜூன் 2005 இல் இருந்து நடைமுறையில் இருக்கும் எனவும், Ministerial Resolution No. 4 of 2025 என்பதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குவைத் அரசினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த கட்டணங்கள் முன்னர் துறை சார்ந்த ரீதியில் சுகாதாரம், கல்வி, […]
குவைத் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சம ஊடகங்களிலும் அனாவசியமற்ற பதிவுகள் மற்றும் பிதற்றல்கள் நாளடைவில் அதிகமாக காணப்படுவதாகவும் இது தொடர்பாக தாங்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் குவைத் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பிரச்சினைகளை நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் முக்கிய குற்றங்களை குற்றவாளிகளை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்ட நபர்களை இதிலிருந்து மீட்டெடுக்க முடியும். மேலும் பொதுமக்களுடன் நேரடி தொடர்பை பேணுவதற்கு cyber crime investigation unit […]
குவைத் அரசாங்கம் புனித ரம்ஜான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக யாசகம் பெற்ற வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையும் அடங்கும். சமீபத்தில் 8 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 11 வெளிநாட்டவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் சந்தைகளுக்கு முன்னால் யாசகம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரம்ஜான் மாதத்தில் காரணமின்றி பொது இடங்களில் உணவு உட்கொள்வது, நீர் மற்றும் பானங்கள் அருந்துவது அல்லது […]