ஜூலை 1, 2025 முதல் குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளிநாடு செல்லும் முன் தங்கள் வேலைவாய்ப்பாளரின் அனுமதியுடன் Exit Permit பெற வேண்டும் என்று பொது தொழில் அதிகாரசபை (Public Authority for Manpower) அறிவித்துள்ளது.

இந்த புதிய சட்டம் Sahel மொபைல் செயலி மூலம் முழுமையாக இலெக்ட்ரானிக்காகவே செயல்படுத்தப்படும், இது வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பாளர்களுக்கும் வெளியேறும் நடைமுறையில் மிகுந்த வசதியும், பாதுகாப்பும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Exit Permit பெறும் முறை (Sahel App மூலம்)
  1. Sahel செயலியில் உள்நுழையவும் (மொழியை தேர்வு செய்யவும்).
  2. Services என்பதைத் தெரிவு செய்யவும்.
  3. Public Authority for Manpower பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. Expatriate Labour Service என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. Issuing Exit Permit என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. கீழ்காணும் விவரங்களை உள்ளீடு செய்யவும்:
    • முழுப்பெயர் மற்றும் சிஎவில் ஐடி (Civil ID)
    • வேலைவாய்ப்பாளர் விவரங்கள்
    • செல்லும் நாள் மற்றும் திரும்பும் நாள்
  7. விண்ணப்பம் வேலைவாய்ப்பாளரிடம் அனுப்பப்படும். அவர் அனுமதி அளித்தவுடன் Exit Permit வழங்கப்படும்.
முக்கிய குறிப்புகள்
  • இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கட்டாயம்.
  • விண்ணப்ப நிலையை செயலியில் நேரடியாக பின் தொடரலாம்.
  • வேலைவாய்ப்பாளர்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி வழங்க வேண்டும்.
  • அனுமதி வழங்கப்பட்டதும், Digital Exit Permit வெளியிடப்படும்.

இந்த புதிய விதிமுறை குவைத் வேலைவாய்ப்பு மற்றும் நிர்வாக அமைப்புகளில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஊழியர் மற்றும் வேலைவாய்ப்பாளருக்கிடையே உண்மையான நியாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

சட்ட அல்லது நிர்வாக சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, அனைத்து வேலைவாய்ப்பாளர்களும் மற்றும் ஊழியர்களும் இந்த புதிய நடைமுறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading