மொபைல் கிரெடிட் மாற்றம் அறிமுகம் – குவைத் அரசு நடவடிக்கை.

குவைத்தில் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு “சஹெல்” (Sahel) செயலியில் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வசதிகள் மூலம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தங்களின் மொபைல் எண்களை எளிதாக நிர்வகிக்க முடியும்.

குறிப்பாக ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களையும் செயலியில் பார்த்து அவற்றை நேரடியாக கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சேவைகளின் கீழ் பயனர்கள் செயலில் இருக்கும் மொபைல் லைன்களை தற்காலிகமாக நிறுத்துதல் நிரந்தரமாக ரத்து செய்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட லைன்களை மீண்டும் செயல்படுத்துதல் போன்ற பல அம்சங்களை பயன்படுத்த முடியும்.

இதனால் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்தையும் ஆன்லைனில் எளிதாக நிர்வகிக்க முடிகிறது.

அதிகாரிகள் கூறுவதாவது இந்த புதிய வசதிகள் குவைத்தின் டிஜிட்டல் மாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டவை. இது அரசு சேவைகளை வேகமாகவும் திறமையாகவும் வழங்க உதவும் என்பதுடன் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு மற்றும் வசதியையும் அளிக்கிறது.

மேலும் எதிர்காலத்தில் மேலும் பல டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading