யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம்
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டது. இதனையொட்டி யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆட்சிக் காலத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கண்காட்சி அரங்கும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ […]
