Tag: Shipping
ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி தாய்லாந்து கொடியுடன் பயணித்த ஒரு சரக்கு கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை குறிவைத்ததாக ஈரானின் அரசுக்கு நெருக்கமான Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த கப்பல் IRGC வழங்கிய எச்சரிக்கைகளை புறக்கணித்து அனுமதி பெறாமல் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து அதிகாரிகளோ அல்லது கப்பல் நிறுவனமோ உடனடி […]
ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு கடற்பாதையில் ஒமான் கடல் எல்லைக்குள் பயணித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) என்ற இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச […]
ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு கடற்பாதை வழியாகச் சென்றபோது இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் கண்காணிப்பு மையமான (UKMTO) இன்று உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் இரண்டு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து நேற்று முதன்முதலாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களின் பெயர்கள் அல்லது அவற்றை குறிவைத்த தரப்பு குறித்து UKMTO எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இதேவேளை ஹோர்முஸ் நீரிணையின் தென்பகுதியில் […]
ஹோர்முஸ் நீரிணை யில் சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என எச்சரித்துள்ளது. சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானின் ஏவுகணை ட்ரோன் மற்றும் கண்காணிப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை அமெரிக்கா–ஈரான் இடையிலான இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரிய சோதனையாக மாறியுள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹோர்முஸ் […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணை அருகே சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலுக்கு ஈரானையே பொறுப்பாக்கியுள்ளார். இந்த தாக்குதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் முட்டாள்தனமான செயல் என அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் கூற்றுப்படி நான்கு ட்ரோன்கள் ஏவப்பட்டதில் ஒன்று கப்பலைத் தாக்கியதுடன் மற்ற மூன்று இடைமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து ஓமான் கடல்பகுதி வழியாக மாற்றுப் பாதையை பயன்படுத்தும் முயற்சிக்கு ஈரான் எதிர்ப்பு […]