வாட்ஸ்அப் மூலம் புதிய நிதி மோசடி
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு போல தோற்றமளிக்கும் வாட்ஸ்அப் செய்திகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயர் தொலைபேசி எண்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் பயன்படுத்தப்பட்டு தேசிய அடையாள அட்டை விபரங்களை புதுப்பிக்க அல்லது சரிபார்க்க வருமாறு போலி அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. பெறுநர்களின் பெயர் முகவரி மற்றும் அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட […]
