பருத்தித்துறை கடலில் 4 மீனவர்கள் மாயம்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்ற பின்னர் அவர்கள் தொடர்பின்றி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் மீனவர் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கடற்படை மீனவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடலின் மோசமான நிலைமை மற்றும் காலநிலை காரணமாக […]
