நீதிபதிகளின் சேவைக்கால நீட்டிப்பில் அரசாங்கம் அவசரம் காட்டுகிறது
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளிலும் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தாமல் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீட்டிப்பதற்காக அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தத்தை அவசரமாக முன்னெடுத்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும் […]
