இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தல் என நினைத்து தவறுதலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை குடித்த 23 வயதுடைய இளம் ஆசிரியை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நகைக் கடையொன்றுக்குச் சென்றிருந்த அவர் தாகம் காரணமாக குடிநீர் கேட்டதையடுத்து கடை ஊழியர் அருகிலுள்ள கடையிலிருந்து வாங்கி வந்த போத்தலில் தண்ணீருக்குப் பதிலாக கழிவறை சுத்திகரிப்பு அமிலம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போத்தலில் […]
