More in Common அமைப்பின் ஆய்வுகளின்படி குடியேற்றம் தற்போது பிரித்தானிய சமூகத்தில் முக்கியமான கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பிரித்தானியாவில் பிறந்தவர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நாட்டின் முக்கிய சமூகப் பிளவுகளில் ஒன்றாக 47 சதவீதமானோர் குறிப்பிடுகின்றனர்.
அதேவேளை, குடியேற்றம் தொடர்பில் மக்களிடையே கவலைகள் இருந்தாலும் அனைவரும் ஒரே மாதிரியான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் தொடர்பான கருத்துகள் அரசியல் ஆதரவு வாழும் பகுதி மற்றும் சமூகப் பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
பிரித்தானியா தற்போது அதிகளவில் பிளவுபட்ட நாடாக இருப்பதாக 64 சதவீதமானோர் கருதுகின்றனர். இருப்பினும் மக்களிடையேயான வேறுபாடுகளைத் தாண்டி மீண்டும் ஒன்றிணைய முடியும் என்று 55 சதவீதமானோர் நம்புகின்றனர்.
More in Common அமைப்பு தொடர்ந்து பிரித்தானிய மக்களின் குடியேற்றம் சமூக ஒற்றுமை மற்றும் அரசியல் கருத்துகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அண்மைய ஆய்வுகளிலும் குடியேற்றம் மற்றும் பன்முகக் கலாசாரம் தொடர்பான மக்களின் பார்வைகள் அவர்கள் வாழும் சமூகச் சூழலுடன் தொடர்புடையதாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




























