இந்த கலந்துரையாடல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC) ஒருங்கிணைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
RMIT இலங்கை புத்தாக்க மையத்தை நிறுவுவதன் மூலம், தற்போதுள்ள கூட்டு பட்டப் படிப்புத் திட்டங்கள் (Joint PhD) மேலும் செயற்திறனுடன் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டில் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) தீர்வுகளை வழங்குவதுடன், தேசிய ஆராய்ச்சி கொள்கைகள் மற்றும் தேவைகளுடன் இணைந்த புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், இந்த புத்தாக்க மையத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும் முக்கிய இலக்காகும்.
புத்தாக்க மையத்தின் முக்கிய நன்மைகள்
- கூட்டு பட்டப் படிப்புத் திட்டங்களை வலுப்படுத்துதல்
- சர்வதேச R&D அனுபவங்களை உள்ளூர் ஆராய்ச்சியுடன் இணைத்தல்
- RMIT மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்கள், தொழில்துறை, அரசு நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தல்
- புதிய தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குதல் மற்றும் வர்த்தக நோக்கங்களை அடைதல்
- புத்தாக்கங்களின் வணிகமயமாக்கலை ஊக்குவித்தல்
- உள்ளூர் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச பயிற்சி மற்றும் அணுகல் வாய்ப்புகளை வழங்குதல்
- புதிய முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சிக்கு பங்களித்தல்





























