உலகத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியானது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மத்தியில் ஒரு அத்தியாவசியமான தேவையாக கருதப்படுகிறது ஆண்டுகள் கடந்து செல்ல செல்ல தொழில்நுட்பம் என்பது மனிதனை ஆட்டி வைக்கும் ஒரு கருவியாக வளர்ந்து கொண்டு வருகின்றது.

தற்போது தொழில் துறைகளில் அல்லது உற்பத்தி துறைகளில் இயந்திர பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எதிர்வரும் காலங்களில் இந்த ஆதிக்கங்கள் மனித வளத்துக்கு எதிரான ஒரு வளர்ச்சியாகவே கருதப்படுகின்றது. உற்பத்தியாளர்கள் தங்களது எதிர்கால செலவினங்களை குறைத்து லாபங்களை அதிகரிக்கும் நோக்கோடு சர்வதேச சந்தையை நோக்கி முக்கியமாக இந்த இயந்திர பயன்பாட்டை நோக்கி நகர்கின்றனர்.

குறிப்பாக தொழில்துறையில் மனித வளத்தின் ஊடாக செய்யப்படுகின்ற சகல வேலைகளும் மிகக் குறுகிய நேரத்தில் இயந்திர வளத்தின் ஊடாக குறைந்த செலவினத்தில் மேற்கொள்ளப்படுவதனால் இவற்றுக்கான கேள்விகளை தொழில் வழங்குனர்கள் அதிகரித்து மனித வளங்களை வேலையில் இருந்து நீக்கும் முயற்சியை கையாளுகின்றனர். எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பம் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மனிதரிடையே உருவாகவும் வாய்ப்பு உள்ளது, தொழில்நுட்பம் இன்றி வாழ்க்கை இல்லை என்ற ஒரு நிலைமையை இந்த உலகம் தானாகவே உருவாக்கி பின்னர் தொழில்நுட்பத்திற்கு அடிமையாக வேலை செய்யும் காலத்தினை மனித இனம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

கூலித்தொழில் தொடங்கி கம்ப்யூட்டர் வரைக்கும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது எனவே மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது எதிர்காலத்தை நோக்கிய வாழ்க்கை பயணத்தில் இந்த தொழில்நுட்பத்தை உள்வாங்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்படும் காலம் மிகத் தொலைவில் இல்லை.

எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையில் தொழில்நுட்பம் சார்ந்த பாட நெறிகளை உள்வாங்க முயற்சி செய்யுங்கள் ஏனெனில் இனிவரும் நூற்றாண்டுகள் கடந்து அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கூட தொழில்நுட்பத்தை கையாள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு மனித இனம் தள்ளப்பட்டுள்ளது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading