Month: July 2026
மேல் மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் மத்திய அரசின் நிர்வாகத்திற்கு மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதுடன் இதற்கு மேல் மாகாண ஆளுநரின் இணக்கப்பாடும் கிடைத்துள்ளது. ஆதார வைத்தியசாலையாக இயங்கி வந்த ஹொரணை மருத்துவமனை கடந்த 2022 ஜூன் 3ஆம் திகதி மாவட்ட பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டிருந்தது. […]
அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரசுடன் தொடர்புகொண்டு அரச சேவைகளைப் பெறும் உரிமை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களில் பொதுச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 23 பொது மாதிரி விண்ணப்பப் படிவங்கள் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு இன்று (01) […]
தித்வா புயல் காரணமாக சேதமடைந்த தலைமன்னார் புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்பே நிறைவடைந்திருந்தாலும் இதுவரை பயணிகள் புகையிரத சேவையை மீள ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஆண்டு தித்வா புயலால் தலைமன்னார் புகையிரத பாதையின் சில பகுதிகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து சேவை இடைநிறுத்தப்பட்டதாக கூறினார். தற்போது […]
நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர் கல்வித்துறையின் வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் தரமற்ற தாதியர்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக இன்று (01) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய நாட்டில் தேவையான 65,000 தாதியர்களுக்கு பதிலாக தற்போது வெறும் 37,000 தாதியர்களே சேவையில் […]
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் பாதாளக்குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பது ஆச்சரியமல்ல என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டதாக கூறினார். […]
கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் எதிர்காலத்தில் இலங்கை தூதரகத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்பு உருவாகும் என்றும் சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கை–கசகஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விமான சேவை சுற்றுலா மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (01) சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான கசகஸ்தான் […]