பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜித்தாவில் அமைந்துள்ள இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகம் உம்ரா செல்லத் திட்டமிட்டு இருக்கும் இலங்கை யாத்திரிகர்களின் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவித்தலின்படி ஜித்தா மற்றும் மதீனா நகரங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து திரும்பும் இணைப்பு விமான சேவைகளில் இடையூறுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உம்ரா பயணத்தை திட்டமிடும் யாத்திரிகர்கள் தங்களது பயண ஏற்பாடுகளைச் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாத்திரிகர்கள் தங்களது உம்ரா குழு பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து பயண நிலவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் அவற்றை சமாளிக்கக்கூடிய வகையில் மாற்று ஏற்பாடுகளை (Contingency Arrangements) தங்களது பயண திட்டங்களில் முன்கூட்டியே உள்ளடக்கிக் கொள்ளுமாறும் இலங்கை கொன்சல் ஜெனரல் அலுவலகம் யாத்திரிகர்களிடம் கேட்டுக்கொள்கிறது..





Leave a Reply