எரிபொருள் பற்றாக்குறை இல்லை – இங்கிலாந்து அரசு
இங்கிலாந்து அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, தற்போது ஜெட் எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மாற்ற தேவையில்லை என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் பொதுவாக முன்கூட்டியே எரிபொருளை வாங்கி வைத்திருப்பதால் மற்றும் விமான நிலையங்களில் தேவையான அளவு எரிபொருள் சேமிப்பு இருப்பதால் பயண சேவைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அதேசமயம் உலகளாவிய சூழ்நிலைகள் காரணமாக சற்று அச்சம் இருப்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே விமான நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளுடன் இணைந்து நிலையை தொடர்ந்து கண்காணித்து, பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் தங்களின் விமான சேவையை முன்கூட்டியே சரிபார்த்து செல்ல வேண்டும் என்றும் அவசர நிலைகளில் பயண காப்பீடு வைத்திருப்பது முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதுவொரு காரணத்தால் விமானம் ரத்து செய்யப்பட்டால், முழு பணத்தை திருப்பி பெறுவதற்கும் அல்லது மாற்று விமானத்தில் பயணம் செய்வதற்கும் சட்ட உரிமைகள் உங்களுக்கு இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது





Leave a Reply