Tag: யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மருத்துவமனை, யாழ்ப்பாணத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஒன்று முழுமையான இரத்தப் பரிசோதனை ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமான ரூ.400 க்கு பதிலாக ரூ.550 வசூலித்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் ஜூலை 13 அன்று மேற்கொண்ட விசேட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 21 அன்று வழக்கு […]
அர்ச்சுனா நாடாளுமன்றம் விலகல் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தாம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும் அதன் பின்னர் அங்கிருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும் ஜனாதிபதி அனுர குமார […]
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் இன்றைய (ஜூலை 19) கட்டத்தில் கால்கள் மடிக்கப்பட்டு செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் காணப்பட்ட மனித என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த என்புத் தொகுதி மிகவும் அசாதாரணமான நிலையில் காணப்பட்டதாகவும் அதன் அமைப்பு மற்றும் புதைக்கப்பட்ட விதம் தொடர்பாக சட்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் […]
Jaffna Tamil News, யாழ்ப்பாணத்தில் நான்கு பேரை வாளால் தாக்கிய வழக்கில் தேடப்பட்ட ஆவா குழு உறுப்பினர் லிக்சாந் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு கிராமத்திலும் பண்ணை பிரதேசத்திலும் மொத்தமாக நான்கு பேரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆவா குழு உறுப்பினராகக் கூறப்படும் படையப்பா என அழைக்கப்படும் லிக்சாந் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் பொலிஸாரால் கைது […]
யாழ்ப்பாணம் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயன்படும் வகையில் அனைத்து வசதிகளுடனான புதிய சேவை மத்திய நிலையம் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதியுதவியுடன் ரூபாய் 15 மில்லியன் செலவில் இந்த சேவை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரட்ட பெரியகுளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள இந்த “நல்லிணக்கத்தின் நிறுத்தும் சேவை நிலையம்” […]