September 9, 2026
Breaking News
USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்

Tag: Anura Kumara Dissanayake

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை?

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தின்போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தல் தனிநபர்களை மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்கக் கட்டமைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் […]

கொமன்வெல்த் தங்கம் வென்ற ருமேஷுக்கு ஜனாதிபதி AKD வாழ்த்து

Rumesh Gold, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்காக தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த வீரர் ருமேஷ் பதிரணவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க (AKD) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ருமேஷின் வெற்றி தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்த தருணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு இளம் தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் […]

அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தை விட்டு விலகலாம், MPஅர்ச்சுனா

அர்ச்சுனா நாடாளுமன்றம் விலகல் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தாம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும் அதன் பின்னர் அங்கிருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும் ஜனாதிபதி அனுர குமார […]

சிறைச்சாலை உயிரிழப்புகளுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பலர் உயிரிழந்த விவகாரத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முழுப் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சிறைச்சாலைகளில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்களுக்கு அப்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்ததை நினைவூட்டினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2020 நவம்பர் […]

வடக்கு கிழக்கில் மட்டும் மாகாண சபைத் தேர்தல் நடத்த அரசு திட்டம்

அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி பின்னர் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான சட்டங்களை நீதிமன்ற சவால்களுக்கு அப்பாற்பட்ட வகையில் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவாகும் முதலமைச்சர்களுக்கு தேவையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்து அதன் […]

அமெரிக்கா – இலங்கை இருதரப்பு உறவுகள்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூர் திங்கட்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்சார் விடயங்கள் பற்றியும் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக […]

ICC தலைவர் சந்திப்பு ஜனாதிபதியுடன் பேச்சு

ICC தலைவர் சந்திப்பு இலங்கையின் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால வளர்ச்சி, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் விளையாட்டு துறையின் முன்னேற்றம் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துவது குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. […]

அனுர அரசில் 1854 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 1854.77 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான வெளிநாட்டு அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தயாசிறி ஜயசேகர முன்வைத்த தகவல் அறியும் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சு அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன் பெறல் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து 2025 மே 6 […]

வெசாக் தினத்தில் அமைதி, ஒற்றுமை குறித்து ஜனாதிபதியின் அழைப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில்,இலங்கை ஜனாதிபதி Anura Kumara Dissanayake புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வெசாக் உலகம் முழுவதும் உள்ள பௌத்தர்களின் மிகப் புனிதமான திருநாளாகும் என தெரிவித்துள்ளார். உலகிற்கு அமைதி, கருணை, சமத்துவம் மற்றும் இணக்க வாழ்வை போதித்த மிகப் பெரிய தத்துவ மரபாக புத்தமதம் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிப்புற உலகில் அமைதியை உருவாக்குவதற்கு முன் ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த மன அமைதி அவசியம் […]

போதைப்பொருள் ஒழிக்க சட்டங்கள் வலுப்படுத்தப்படும் – ஜனாதிபதி உறுதி

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தற்போதைய சட்டங்களில் அவசர திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி Anura Kumara Dissanayake தெரிவித்துள்ளார். “ரடம எகடா” (A Nation United) தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் போதைப்பொருள் வலையமைப்புகளை முறியடிக்க தேவையான அனைத்து சட்ட திருத்தங்களும் விரைவாக அமல்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும், இந்த நடவடிக்கைகள் மூலம் […]