சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 1854.77 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான வெளிநாட்டு அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தயாசிறி ஜயசேகர முன்வைத்த தகவல் அறியும் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சு அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன் பெறல் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து 2025 மே 6 ஆம் திகதி வரையிலான காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிகளைத் தவிர்த்து அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு அரச கடன்களின் மொத்த பெறுமதி 1854.77 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மீட்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்தக் கடன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவம் தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கவனம் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்