கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்ததாவது, வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் 2025 டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலில் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2025 நவம்பர் 1 முதல் 2025 நவம்பர் 30 வரை பெற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும்,
- 2022, 2023 மற்றும் 2024 கல்விப் பொதுத் தாதர பத்திர (உயர்தர) பரீட்சைகளில் முதல் அல்லது இரண்டாம் தவணையாக தோற்றிய மாணவர்கள்,
- 2025 ஆம் ஆண்டில் மீண்டும் உயர்தர பரீட்சைக்குத் தோன்றும் மாணவர்களின் கோரிக்கைகள்,
- மேலும் நிலவும் சீரற்ற வானிலை நிலைமை,
என பல காரணிகளை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை நீட்டிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கான உத்தியோகப்பூர்வ இணையதளம் www.studentloans.mohe.gov.lk ல் உங்களுடைய விண்ணப்பங்களை எதிர்வரும் 15 ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பியுங்கள்.





Leave a Reply