கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ,வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைச் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகிறது.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப் படிப்பு பாட நெறிகளை வழங்கும் நிறுவனங்களில் உள்ள 131 பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30 ஆம் திகதியுடன் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply