2026 ஆம் ஆண்டு முதல் வருடாந்திர திட்டமாக “நிலையான விவசாயத் திட்டம்” என்ற விவசாயக் கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
💰 ரூ. 800 மில்லியன் நிதி ஒதுக்கீடு
2026 ஆம் ஆண்டில் இந்த நிலையான விவசாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, நிலையான விவசாய நிதியத்தின் தற்போதைய நிதியிலிருந்து ரூ. 800 மில்லியன் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🌱 விவசாய சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் திட்டம்
விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) விவசாயத் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதற்காக இலங்கை அரசும், விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியமும் (IFAD) இணைந்து சிறு அளவிலான விவசாயத் வணிக பங்கேற்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
🤝 மத்திய வங்கி மற்றும் அமைச்சுகள் இணைப்பு
இந்தத் திட்டம், இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய மேம்பாட்டுத் துறை உடன் இணைந்து, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
🚜 விவசாயக் கடன்கள் ஒருங்கிணைப்பு
சிறு அளவிலான விவசாயத் வணிக பங்கேற்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து கடன்களும், விவசாயக் கடன்களுக்காக உருவாக்கப்பட்ட “நிலையான விவசாய நிதியம்” என்ற மறைமுக நிதிக்கு அனுப்பப்படும்.
இந்த நிதியை பயன்படுத்தி, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு “நிலையான விவசாயத் திட்டம்” என்ற பெயரில் விவசாயக் கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளன.





Leave a Reply