இலங்கை நாட்டிலிருந்து வெளிநாடு சென்று தொழில் புரிகின்ற அனைவருக்கும் இலங்கை அரசினால் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த கடன் வசதி திட்டத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை இலங்கை அரசு தற்போது ஏற்படுத்தி தந்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அதனுடன் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதி உதவியுடன் பொது மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள் மூலம் இந்த கடன் திட்டத்தினை வழங்குகிறது.
குறித்த கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு பிரதான நிபந்தனைகளாக,
1. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்று இருக்க வேண்டும்.
2. வெளிநாட்டில் குறித்த தொழில் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் சட்டப்படி உரிய முறையில் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்.
இந்த கடன் வசதியானது வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு வியாபார நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அல்லது ஏற்கனவே மேற்கொள்ளும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வீடு அல்லது கட்டுமான பணிகளை புனர்நிர்மாணம் செய்வதற்காகவும், நிலம் அல்லது வாகனம் வாங்குதல் அதை அடுத்து பிள்ளைகளின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்கு மற்றும் வேறு சில உற்பத்தி நோக்கங்களுக்காக இலங்கை அரசினால் வழங்கப்படுகின்றது.
வட்டி விகிதம் 8%, 2 மில்லியன் ரூபா (2000000) வரையிலான கடன் வசதி, 3 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலப்பகுதி, வெளிநாட்டு நாணய கணக்கின் (PFCA) ஊடாக தவணை முறையில் செலுத்த வேண்டும்.
இந்தக் கடனை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் தனிநபராக அல்லது குழுவாக குறித்த கடனுக்குரிய விண்ணப்ப படிவத்தினை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும் வாங்கியினால் கேட்க்கப்படுகின்ற சகல ஆவணங்களும் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு குறித்த வங்கிக்கு வழங்கப்பட வேண்டும்.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் காலப்பகுதியில் வங்கியுடன் நேரடி தொடர்பின் மூலம் அல்லது விடுமுறை காலத்தில் நீங்கள் இலங்கை சென்று குறித்த வங்கியுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அதன் மூலமாக இந்த கடன் வசதி தொடர்பான ஒழுங்கு அமைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இந்தக் கடன் வசதிகள் அனைத்தும் குறித்த வங்கியினால் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் திருப்பி செலுத்தும் காலப்பகுதிக்குள் நீங்கள் வெளிநாட்டு நாணய அலகை பயன்படுத்தி மாதாந்த தவணை பணத்தினை (தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கின்) ஊடாக செலுத்த முடியும்.
கடன் வசதி வழங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த வங்கி ஆனது உங்களது பெயரில் தனிப்பட்ட வெளிநாட்டு நாணய கணக்கினை ஆரம்பித்து அதனுடாக உங்களது மாதாந்த பணத்தினை செலுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்குவார்கள்.
இலங்கை ரூபாயில் நீங்கள் செலுத்துவதாக இருந்தால் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும் இதனால் உங்களுக்கு கடன் சுமைகள் அதிகமாக காணப்படும்
இதை அடிப்படையாகக் கொண்டு இந்த கடன் வசதிக்கு செலுத்தும் தவணைப் முறை பணமானது வெளிநாட்டு நாணய அலகிலையே நிர்ணயிக்க படுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்





Leave a Reply