டான் பிரியசாத் வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர்கள் அல்லது இனம் தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் விசாரணை தெரிவித்திருந்தாலும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நடத்திய சந்தேகநபர்களுக்கு தகவல்களை வழங்கியதன் அடிப்படையில் தற்போது மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டிருந்த வேலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த டான் பிரியசாத் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததாக போலீசார் அறிவித்திருந்தனர். மீண்டும் டான் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும் அதன் பின்னர் 23/4/2025 அதிகாலை மறுபடியும் அவர் உயிரிழந்ததாக இலங்கை போலீசார் அறிவித்திருந்தனர் இதன்போது ஏற்கனவே அவர்கள் டான் பிரியசாத் தொடர்பாக வெளியிட்டு இருந்த செய்திகளை திரும்ப பெறுவதாகவும் அறிவித்திருந்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்காக 9 எம் எம் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு சிலரால் குறித்த டான் பிரியசாத் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பாக கொலன்னாவை பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக போட்டியிட இருந்த நிலையில் அரசியல் காரணங்களுக்காக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மற்றொருபுறம் நாட்டில் வளர்ந்து வருகின்ற பாதாள கும்பல் இடையிலான மோதல் காரணமாகவும் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பில் இது தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசாங்கம் கடந்த கால ஆட்சியாளர்களை போல தங்களுக்கு என்று மறைமுகமான சட்டவிரோத குழுக்களை வைத்துக்கொண்டு அவர்களின் ஊடாக தங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் நபர்களை இல்லாத ஒளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்ததை காணக்கூடியதாக உள்ளது.
இருந்தும் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பிரதானமாக ஒரு தந்தை மற்றும் மகன் தொடர்பான முக்கியமான தகவல்களை நீதிமன்ற அனுமதியுடன் வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணை ஊடாக முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2022 ஜூலை 26 ஆம் தேதி டான் பிரியசாத்தின் சகோதரர் திலின பிரியசாத் ஓருகொடவத்த பாலம் அருகே கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிலுவையில் காணப்படுகிறது, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பண்டுல பியால் மற்றும் மாதவ சுதர்ஷன இந்தக் கொலையின் பிரதான சந்தேகநபர்களாக இருப்பார்கள் என போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இருவர் மீதமான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அனுமதியை கொழும்பு நீதிமன்ற நீதிபதியிடம் அனுமதி கோரியும் இவர்களது பயணத்தடையை அமல்படுத்துமாறும் அத்தோடு இவர்களது தொலைபேசி உரையாடல்களை பரிசோதிப்பதற்கான அனுமதிகளையும் கொழும்பு நீதிமன்றத்தில் இருந்து வெல்லம்பிட்டிய பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்துடன் இந்த வருடத்தில் அநேகமான கொலை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கிட்டத்தட்ட 26 பேர் இதோடு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பல எதிர்க்கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.





Leave a Reply