இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் இலங்கை அரசு வரிகள் தொடர்பான சில மாற்றங்களையும் புதிய நடைமுறைகளையும் இந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்துள்ளது அந்த வகையில் வங்கியில் வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 2025 தொடக்கம் இலங்கையில் வங்கி வட்டி வருமானங்களுக்கான வரி அறவீட்டு வீதத்தில் சிறிய மாற்றம் அதாவது ஏற்கனவே 5% இருந்த இந்த வரி அறவீடு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 10% அதிகரிக்கப்படுள்ளது.
இந்த வரி விகித அதிகரிப்பை தொடர்ந்து வங்கி வருமானம் 1.8 மில்லியனுக்கு குறைவாக காணப்படுமாயின் இந்த வட்டி வருமானம் மீதான வரியை விலக்களிப்பு செய்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 1.8 மில்லியனுக்கு அதிகமான வருமானத்தை வங்கி கணக்கு காட்டும் பட்சத்தில் (வருடாந்தம்) இந்த 10% அளவில் மேற்கொள்ளப்படும் அதாவது குறித்த வகை கணக்கின் வட்டி வருமானம் மீதான 10% அறவிடப்படும்.
இது தொடர்பான முழு விளக்கத்தினை கீழ்காணும் வீடியோவினூடாக பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.





Leave a Reply