Tag: border security
UK குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள் சென்ற சிறிய படகை ஆங்கிலக் கால்வாய் வழியாக இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான முகம்மது தாஜிக் (Mohammad Tajik) என்பவர் 53 பேரை ஏற்றிச் சென்ற அதிக நெரிசலான சிறிய படகை இயக்கியதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவம் மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் UK குள் சட்டவிரோதமாக […]
அகதி கடத்தல் கும்பல், பால்கன் நாடுகள் வழியாக சட்டவிரோதமாக அகதிகளை மேற்கு ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலை கிரேக்க அதிகாரிகள் தலைமையில் Europol ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். கிரேக்கம், பல்கேரியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டதில் மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் கிரேக்கத்தில், ஒருவர் பல்கேரியாவில் மற்றும் ஒருவர் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின்படி […]
பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய Immigration and Asylum Bill 2026 தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த மசோதாவின்படி மனிதக் கடத்தல் அல்லது நவீன அடிமைத்தனத்திற்கு ஆளானவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாக தாமதமாக தெரிவித்தால் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சில சட்டப் பாதுகாப்புகள் மற்றும் உதவிகள் மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையான பாதிக்கப்பட்டவர்களே பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக அமைப்புகள் எச்சரிக்கின்றன. மேலும், புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் குழந்தைகள் உட்பட […]
UK migrant returns, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஒருவரை திருப்பி அனுப்பினால் ஒருவரை சட்டப்பூர்வமாக ஏற்கும் ஒப்பந்தத்தின் முதல் மாதத்தில் எந்தப் புலம்பெயர்ந்தோரும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னரும் சிறிய படகுகள் மூலம் பிரிட்டனை அடையும் புலம்பெயர்ந்தோர் வருகை தொடர்ந்து இடம்பெற்றதாகவும் ஆனால் முதல் மாத காலப்பகுதியில் ஒப்பந்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட மீள அனுப்பும் நடவடிக்கைகள் […]
சுவிட்சர்லாந்து எல்லை சோதனை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள் சுவிட்சர்லாந்துடனான நில எல்லை கட்டுப்பாடுகளை 2026 டிசம்பர் வரை தொடர முடிவு செய்துள்ளன. இந்த நடவடிக்கை சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் மனிதக் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பது, உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எல்லை சோதனைகள் நடைமுறையில் இருந்தாலும் சுவிட்சர்லாந்து மற்றும் ஷெங்கன் (Schengen) பகுதியின் சுதந்திரமான பயண முறை முழுமையாக நிறுத்தப்படவில்லை. தேவையான இடங்களில் […]
UK Tamil News, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாக குடியேறிகளை கடத்தியதாக தண்டனை பெற்ற முக்கிய மனிதக் கடத்தல்காரர் ஒருவர் போலி அடையாளத்தை பயன்படுத்தி இங்கிலாந்தில் வாழ்ந்து வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த ட்வானா ஜமால் (Twana Jamal) என்பவர் பிரான்சில் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் வேறு பெயரில் இங்கிலாந்திற்குள் நுழைந்து அங்கு புகலிடம் கோரி வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சவுதி அரேபியா வில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஒரே வாரத்தில் 10,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5,899 பேர் குடியிருப்பு சட்ட மீறல்களுக்காகவும் 3,084 பேர் எல்லைப் பாதுகாப்புச் சட்ட மீறல்களுக்காகவும் 1,742 பேர் தொழிலாளர் சட்ட மீறல்களுக்காகவும் கைது செய்யப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 7,989 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் 14,268 பேர் பயண […]
Immigration News, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய குடியேற்ற மற்றும் புகலிடம் (Migration and Asylum Pact) ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதியாக Eurodac என்ற மேம்படுத்தப்பட்ட உயிரியல் (biometric) தரவுத்தளம் 2026 ஜூன் 12 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அமைப்பு புகலிடம் கோருவோர் மற்றும் சட்டவிரோதமாக எல்லை கடந்தவர்களின் விரல் ரேகைகள் முக அடையாளத் தகவல்கள் மற்றும் பிற முக்கிய விவரங்களை மையப்படுத்தப்பட்ட முறையில் பதிவு செய்யும். புதிய Eurodac அமைப்பின் மூலம் […]
Riyadh Saudi Arabiaசவுதி அரேபியாவில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லை பாதுகாப்பு சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளில் ஒரே வாரத்தில் 7,466 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 21 முதல் மே 27, 2026 வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் மொத்தமாக 8,090 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4,266 பேர் குடியிருப்பு சட்டத்தை மீறியவர்கள், 2,653 பேர் […]
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய பெரிய எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் £660 மில்லியன் ஆகும். இது கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளும் மேற்கொண்ட மிகப்பெரிய எல்லை கட்டுப்பாட்டு திட்டங்களில் ஒன்றாகும். இந்த மூன்று ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தின் கீழ் பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகள் அதிகரிக்கப்படவுள்ளன. மனித கடத்தல் குழுக்களை […]