Tag: Child Protection
சுவிட்சர்லாந்து நபர் கைது, தாய்லாந்தின் புகெட் பகுதியில் 14 வயது சிறுவனை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி குறித்த நபர் சிறுவனை தொடர்புகொண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாய்லாந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்த வழக்கு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தீவிரமாக […]
India News,இந்தியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கும் துஷ்பிரயோகம் செய்வதற்கும் தொடர்புடைய உள்ளடக்கங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படும் விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் இத்தகைய சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு வழிவகுக்கும் கட்டண விளம்பரங்கள் வெளியாகியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் அவற்றை அணுக வழிவகுக்கும் பதிவுகளையும் இன்ஸ்டாகிராமில் […]
பிரான்சில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை புகார்கள், பிரான்சில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 88,000 புகார்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களால் (Procureurs) மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சமீபத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சிறுமி லியானா (Lyhanna) வழக்கைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மீளாய்வின் நோக்கம் இதுவரை போதுமான அளவில் விசாரிக்கப்படாத அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் பரிசீலித்து தேவையான இடங்களில் விசாரணையை […]
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றாக ஒழிப்பதற்கு பல்வேறு துறைகள் இணைந்த பரந்துபட்ட மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுவது அவசியம் என வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நஜாட் மால்லா ஜித்துடன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. தெற்காசிய நாடுகளுக்கிடையிலான அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள […]
சிறுவர்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு, சிறுவர் பாதுகாப்பு துறையில் செயல்படும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான ஊழியர் வெற்றிடங்களே பிரதான காரணம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொலிஸ் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் கணிசமான உத்தியோகத்தர் பற்றாக்குறை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்காக துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பன்முகக் கட்டமைப்பு மேலாண்மை சேவை திணைக்களம் உள்ளிட்ட […]
சமூக ஊடகத் தடை தொடர்பாக பிரித்தானிய அரசு முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மனநலனை உறுதிப்படுத்தும் நோக்கில் 16 வயதிற்குட்பட்டவர்களின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் கியர் ஸ்டார்மர்(Keir Starmer) வெளியிட்ட அறிவிப்பின்படி Snapchat, TikTok, YouTube, Instagram மற்றும் Facebook போன்ற தளங்களில் 16 வயதிற்குக் குறைவானவர்களின் அணுகலை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த ஒழுங்குமுறைகள் 2027 ஆம் ஆண்டில் அமலுக்கு வரலாம் என […]
சிறுவர்களைத் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டங்களை உருவாக்கி மேலும் வலுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் மத அடிப்படையிலான தவறான புரிதல்கள் அல்லது அரசியல் நோக்கங்களால் திசைதிருப்பப்படாமல் கையாளப்பட வேண்டிய தேசிய பிரச்சினை எனவும் கட்சி தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மத நிறுவனங்களுக்குள் மட்டும் நிகழும் தனிப்பட்ட பிரச்சினை அல்லாது நாடு முழுவதும் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஒரு பரந்த சமூகப் பிரச்சினை எனக் […]
தகவல் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 06-01-2026 அனைத்து தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது. தவறான தகவலைச் சமர்ப்பிப்பது எந்த அரசாங்க சலுகையையும் ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்க. ஒரு குழந்தை 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் தகவல் வழங்கப்பட வேண்டும். கீழுள்ள இணைப்பின் ஊடாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் சிங்கள மொழியில் உள்ளதன் காரணமாக கூகுளில் தமிழ் மொழிக்கு மாற்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். திட்வா புயலுக்குப் […]