சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சிறுவர்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு, சிறுவர் பாதுகாப்பு துறையில் செயல்படும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான ஊழியர் வெற்றிடங்களே பிரதான காரணம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொலிஸ் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் கணிசமான உத்தியோகத்தர் பற்றாக்குறை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்வதற்காக துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பன்முகக் கட்டமைப்பு மேலாண்மை சேவை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் இயங்கும் பொலிஸ் பிரிவை சுயாதீன பிரிவாக மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுப்பது மற்றும் சிறுவர் மேல் நீதிமன்றங்களை நிறுவி வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்