நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் சுமார் 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகமானோர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இவ்வாறு அப் பகுதியிலிருந்து 21 சிறுவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
குறித்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply