Tag: dengue
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளின் வரவு-செலவுத் திட்டங்கள் மூலம் மொத்தமாக ரூபா 11.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் டெங்கு பரவல் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துள்ளதாகவும் டெங்கு காரணமாக ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையின்படி நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் […]
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,144 ஆக உயர்ந்துள்ளதுடன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி வரையில் மட்டும் 7,302 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். தென்மேற்கு பருவமழையுடன் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் வேகமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது 89 சுகாதார மருத்துவ அதிகாரி […]
சுகாதார அமைச்சு தெரிவித்ததாவது டெங்கு மாற்று வைரஸ் காரணமாக நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த டெங்கு மாற்று வைரஸ் புதிய வகை தாக்கம் காரணமாக நோய் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாகவும், பல பகுதிகளில் நோயாளிகள் அதிகமாக பதிவாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்கள் மற்றும் மக்கள் அடர்த்தி அதிகமான பகுதிகளில் டெங்கு பரவல் தீவிரமடைந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மழைக்கால சூழ்நிலை மற்றும் நீர் தேங்கும் இடங்கள் […]
France நாட்டில் கொசு மூலம் பரவும் நோய்கள் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். 2026 மே மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் டெங்கு (Dengue), சிக்குன்குனியா (Chikungunya) மற்றும் ஜிகா (Zika) போன்ற நோய்களின் மொத்தம் 92 இறக்குமதி செய்யப்பட்ட (imported) பாதிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் (Santé publique France) வெளியிட்ட தகவலின்படி இந்த 92 வழக்குகளில் 79 பேர் டெங்கு காய்ச்சலாலும் 12 பேர் […]
இலங்கையில் 7 மாவட்டங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கலுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் அதிகமான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வழங்கிய தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4,617 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் கலுத்துறை மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த […]