தங்கம் கடத்த முயன்ற 8 பேர் சுங்கக் காவலில்
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கவிருந்த பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது இந்தியப் பிரஜைகளான இருவரிடமிருந்து தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 26 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைக்கு […]
