Tag: Negombo
உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக Travel and Tour World நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தரவரிசையில் மெக்ஸிகோ முதலிடத்தையும் இத்தாலி இரண்டாம் இடத்தையும் ஸ்பெயின் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ள நிலையில் இலங்கை 50ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பரபரப்பான வீதி உணவுக் கடைகள் முதல் கடற்கரையோர உயர்தர உணவகங்கள் வரை பல்வேறு சுவை அனுபவங்களை வழங்கும் நாடாக இலங்கை பாராட்டப்பட்டுள்ளது. உணவுக் கலாசார […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி மொத்தம் 166 பெண் கைதிகள் வாரியபொல, போகம்பரை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான வன்முறை மோதல் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதலின்போது சிறை அதிகாரிகளைத் தாக்க கைதிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல கூர்மையான ஆயுதங்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகள் சிறை வளாகத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கைதிகள் சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருந்த தேங்காய்களையும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து பேர் கொண்ட தடயவியல் மருத்துவக் குழு 24 உடல்களுக்கு மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையின் படி சிறை அதிகாரிகள் தலையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல்களால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மரணங்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டாலும் 9 பேர் கொடூரமான தாக்குதல்களாலும் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவத்தில் இந்தியப் பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. சிறையில் கைதியாக இருந்த 73 வயதுடைய எஸ். உன்னிகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வன்முறையில் ஏற்கனவே 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பான தகவல் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வன்முறையைத் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அதிகாரிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி காலை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு பின்னர் கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. முதலில் ஒரு […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க வழங்கிய தகவலின்படி குறித்த கைதியின் மரணத்திற்கான துல்லியமான காரணம் தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு இருந்த 1,033 கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கலவரத்தை […]
கொலைக்களமான நீர்கொழும்பு சிறை வரலாற்றில் இல்லாத வன்முறை மிகக் கொடூரமான சம்பவமாகப் பதிவாகியுள்ளது. கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு சிறிது நேரத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்த கொடூரமான தாக்குதலாக மாறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 100 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய நாள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த பதற்றம் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டாவது நாளாகவும் நிலவிய பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறை வளாகத்தைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதுடன் வான்வழி கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை சிறை வளாகத்துக்குள் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் பலர் உயிரிழந்ததுடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பாதாள உலகக் குழுக்களின் செல்வாக்கு […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் அரசாங்கம் உண்மையை மறைக்காமல் உடனடியாக உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இந்தச் சம்பவத்தில் சுமார் 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கமோ சிறைச்சாலைகள் திணைக்களமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமொன்றையும் வழங்கவில்லை என […]