Tag: Sri Lanka crime
இம்ரானின் நிதிப் பொறுப்பாளர் கைது, மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க கௌசல்யா எனப்படும் ‘ரத்மலானே சைமா’ பாதாள உலகக் குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராக நீண்டகாலமாக செயல்பட்டிருந்தமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கை மற்றும் மலேசிய காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது சைமா உட்பட மூவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில் கஞ்சிபானி இம்ரானின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் சைமாவே கையாள்ந்ததுடன் அவரது சமூக ஊடக நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் […]
உடற் சிகிச்சை நிபுணர் கொலை, நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். விளக்கமறியலில் உள்ளவர்கள் நாரம்மல […]
கம்பளை கொலை, – கீரபனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கீரபனை பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான தகவலை அடுத்து கம்பளை காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. […]
மட்டக்களப்பு வாள்வெட்டு, ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் போது வழங்கப்பட்ட அன்னதானத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தகராறு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அன்னதான உணவின் தரம் குறித்து இளைஞர் ஒருவர் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் ஏழு பேர் கொண்ட குழுவொன்று வாள்களுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது […]
Port City Murder, கொழும்பு போர்ட் சிட்டியில் கடத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில் எஹெலியகொட பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை கணினி தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நிஷாந்த டி சொய்சா நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த சில நாட்களாக கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் தொடர்பில் […]
Karapitiya Body Found, காலி கராப்பிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் அழுகிய நிலையில் 58 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் திருமணம் செய்யாதவராகவும் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தவராகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கராப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் வீட்டை சோதனை செய்தபோது குளியலறைக்குள் […]
கொழும்பு பொரலஸ்கமுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தொழிலதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விடுமுறை விடுதியின் உரிமையாளரான 55 வயதுடைய அவர் தனது விடுதிக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தார். பலத்த காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் யார் […]
Bellanwila shooting, கொழும்பு பொரலஸ்கமுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விடுமுறை விடுதியின் உரிமையாளரான 55 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் உடனடியாக களுபோவில போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் நிகழ்ந்த வேளையில் குறித்த தொழிலதிபர் தனது விடுதிக்கு முன்பாக நின்றுகொண்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் யார் என்பது அல்லது எந்த […]
சீனக் குழு மோதல், கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கடத்தல் கொலைச் சம்பவம் சர்வதேச இணையவழி மோசடி வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் கொழும்பு குற்றப் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கடத்தப்பட்டு பின்னர் எஹெலியகோடா பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீனப் பிரஜை இணையவழி மற்றும் கணினி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சீனப் […]
கொழும்பு வத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பள்ளியவத்தையில் மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் […]